ஒரு வீட்டின்(மனையின்) ஆன்மீக அதிர்வலைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் (வாஸ்து சாஸ்திரம்)

1. முன்னுரை

நம் அனைவரும் வசிக்கும், வீடு என்ற ஒரு இடம் நமது வாழ்வியல் முறை படி அல்லாமல் பலசமயங்களில் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. நம் வீட்டிலிருந்து வெளிபடும் ஆன்மீக அதிர்வுகள்,நாம் வாழும் முறை, நமது வீடு கட்டிய அமைப்பு மற்றும் அதை பராமரிக்கும் முறையை சார்ந்துள்ளது.

வீட்டின் ஆன்மீக அதிர்வுகளை சீர்ப்படுத்துவதால், பல நேர்மறை தன்மைகளாகிய அதிகரித்த நிதி நிலைமை, உறவு மேம்படுதல், நீடித்த மகிழ்ச்சி மற்றும் அங்கு வசிப்பவர்களின் ஆன்மீக பயிற்சி தடையின்றி நிகழ்கிறது என்று எங்கள் ஆன்மீக ஆராய்ச்சி காட்டுகிறது.

இந்த கட்டுரையில் நமது வீடுகளின் ஆன்மீக அதிர்வுகள் எதனால் பாதிக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வோம்.

2. மனையின் அதிர்வுகளை ஆய்வு செய்தல்

ஆன்மீக ஆராய்ச்சியில், ஆன்மீக உலகத்தை பற்றி அறிந்து கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த ஆய்வின் மூலம் எந்தவொரு அனுபவத்தின் உண்மையான காரணத்தையும் அதன் விளைவையும் நாம் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக,ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், மறைந்த மூதாதையர்களால் திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

இதுபோல, ஏன் சில வீட்டில்  மட்டும் அதிர்ஷ்டமும், மகிழ்ச்சியும்  நிரம்பி உள்ளது மற்றும் அதற்கு புறம்பாக மற்றொரு வீட்டில் இருப்பவர்கள் ஏன் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள ஆன்மீக ஆராய்ச்சி உதவுகிறது. வீடுகளில் நிலவும் ஆன்மீக அதிர்வுகளைப் பற்றி அறிந்துகொள்ள,முதலில் நாம் வாஸ்து சாஸ்திரத்தின்   அடிப்படையைப் பற்றி புரிந்துகொள்வோம்.அதைப் பற்றி விளக்கங்கள் அடுத்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

2.1 வாஸ்துசாஸ்திரம் என்றால் என்ன?

வரைவிலக்கணம்: வாஸ்துசாஸ்திரம் என்பது ஒரு வேத விஞ்ஞானமாகும். ஒரு மனையில் உருவாகும் இனிமையான மற்றும் துன்பகரமான அதிர்வெண்களுக்கு இடையிலான வேறுபாட்டை இது விளக்குகிறது.

2.2 வாஸ்து என்றால் என்ன?

வாஸ்து (அல்லது ‘மனை ‘) என்பது மேற்கூரை உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாப் பக்கங்களிலும் சுவர்களால் சூழ்ந்துள்ள திறந்தவெளியைக் குறிக்கிறது. அத்தகைய கட்டட அமைப்பு ஒவ்வொன்றிலும் சக்தி மையம் அதாவது மனையின் தெய்வம் உள்ளது. அங்கு நிகழும் எந்த ஒரு இனிமையான அல்லது துயரமான நிகழ்வுக்கும் சக்தி வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்

2.3 மனையில் ஏற்படும் அதிர்வலைகள்

மனையிலிருந்து உண்டாகும் இனிமை மற்றும் கஷ்டம் தரும் அதிர்வலைகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதற்காக, இந்த அதிர்வலைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை முதலில் புரிந்துகொள்வோம்.

காலியாக உள்ள மனையில் மூன்று வகையான அதிர்வலைகள் உள்ளன:

  • முதல் வகை அதிர்வலைகள் வீடு கட்டப்பட்ட நிலத்திலிருந்து உமிழப்படும் அதிர்வலைகளாகும். (கீழே உள்ள படம் A ஐப் பார்க்கவும்.)
  • இரண்டாம் வகை அதிர்வலைகள் 360 அதிர்வலைகளைக் கொண்டுள்ளது, அவை பூமிப் பகுதிக்கு (பூலோகம்) கிடைமட்டமாகப் பயணிக்கின்றன (‘மரணத்திற்குப் பின் வாழ்க்கை‘ என்ற கட்டுரையைப் பார்க்கவும்). இந்த அதிர்வலைகள் வட்ட வடிவில் வளாகத்தின் வழியாக செல்கின்றன.
  • மூன்றாவது வகை அதிர்வலைகள், மனையை நிர்மாணிப்பவர்கள், மனையில் வசிப்பவர்கள் மற்றும் மனைக்கு வருபவர்களின் எண்ணங்களின் மூலம் உருவாகும் அதிர்வலைகளாகும்.

What is a vastu and how are frequencies created in it?

இந்த மூன்று வகை அதிர்வலைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன, இதன் விளைவாக, வளாகத்தில் உள்ள அதிர்வலைகளின் ஒட்டுமொத்த இயக்கம் இடையூறுக்கு உள்ளாகிறது (மேலே உள்ள படம் B ஐப் பார்க்கவும்.)

இவ்வாறு இடையூறுக்கு உட்படும் அதிர்வுவலைகளின் விளைவை எவ்வாறு தவிர்ப்பது என்பதைப் புரிந்துகொள்ள வாஸ்துசாஸ்திரம் உதவுகிறது.

3. ஒரு வீட்டின் அதிர்வலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள்

3.1 வாஸ்துசாஸ்திரத்தின்படி வளாகத்தின் அதிர்வலைகளில் பாதிப்பை உண்டாகும் காரணிகள்

வாஸ்துசாஸ்திரத்தின்படி வளாகத்தின் அதிர்வலைகளில் பாதிப்பை உண்டாகும் காரணிகள் மூலம் ஏற்படும் துன்பத்தைத் தவிர்க்கவும், ஆன்மீக ரீதியில் நேர்மறையான அதிர்வலைகளை ஈர்க்கவும், வளாகத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் குறித்து, வாஸ்துசாஸ்திரம் விரிவாக அறிவுறுத்துகிறது. அதன் வழிகாட்டுதலின் படி சில உதாரணங்களை மட்டும் கீழே கொடுத்துள்ளோம்

3.1.1 நிலத்தில் ஏற்படும் அதிர்வுகள்

ஒரு மனைக்கு நிலத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, எந்த வகையான அதிர்வுகளை நிலம் ஈர்க்கிறது என்பதை சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியம். உதாரணமாக:

Spiritual vibrations in the home and their effects (vastu shastra)

  • நாற்கர அல்லது செவ்வக மனைகள் நேர்மறையான விளைவுகளை உருவாக்குகின்றன, அதே சமயம் மற்ற வடிவங்கள் கஷ்டம் தரும் சக்திகளை ஏற்படுத்தக்கூடும்.
  • வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளுக்கு இடையே உள்ள தூரம் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளுக்கு இடையே உள்ள தூரத்தை விட அதிகமாக இருக்கும் போது நிலமானது இனிமையான அதிர்வுகளை அளிக்கிறது. மாறாக அதன் தூரம் குறைவாக இருக்கும்போது கஷ்டங்கள் அதிகரிக்கிறது
  • மனையின் முன் பகுதி பின்பகுதியை விட குறுகலாக இருந்தால்,மனை உரிமையாளருக்கு செழுமையையும் மன அமைதியையும் அளிக்கிறது. நிலத்தின் முன் பகுதி பின்புறத்தை விட அகலமாக இருந்தால்,மனையில் ஏற்படும் எதிர்மறை அதிர்வுகளால், உரிமையாளர் துன்பத்திற்கு உள்ளாகிறார்
  • இரண்டு பெரிய மனைக்களுக்கு இடையில் உள்ள ஒரு சிறிய நிலம் துன்பத்திற்கு உள்ளாகிறது, ஏனெனில் பெரிய மனைகளின் அதிர்வெண்கள் சிறிய நிலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதை தவிர ஏற்ற இறக்கங்கள் ஒரு மனையை எவ்வாறு பாதிக்கின்றன என்றும், எந்த மாதிரியான சூழல் அனுகூலமாக உள்ளது அல்லது கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் ஆறுகள், ஏரிகள் அல்லது குளம் போன்ற வடிவங்களில் நீர் இருப்பது நன்மை தரக்கூடியதா என்பதை போன்ற விவரங்களையும் வாஸ்துசாஸ்திரம் வழங்குகிறது. உதாரணமாக , ஒரு வீட்டை கல்லறை அல்லது தகனம் செய்யும் இடங்களுக்கு அருகே கட்டுவதற்கு பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் மறைந்தவரின் சூட்சும உடல்கள்  மற்றும் தீய சக்திகள் (பேய்கள், பிசாசுகள், ஆவிகள் போன்றவை) அந்த இடத்திற்கு வருகைத் தந்து துன்பத்தை ஏற்படுத்தலாம்.

3.1.2 மனையில்(வீட்டில்) ஏற்படும்இயல்பான அதிர்வுகள்

வாஸ்துசாஸ்திரத்தின் படி, மனையில் ஏற்படும் இயல்பான ஆன்மீக அதிர்வுகள் பல காரணிகளை சார்ந்து உள்ளது:

  • கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பொருள் உதாரணத்திற்கு சிமெண்டை விட கல், மண் அதிகப்படியான நேர்மறை அதிர்வலைகள் ஈர்க்கும் திறன் கொண்டவை.
  • பிரதான நுழைவுவாயில், சமையலறை, கழிப்பறை போன்றவை இருக்கும் திசை.
  • மனை கட்டபட்டத்தின் பின்னணி (அதாவது எதற்காகக் கட்டப்பட்டது) உதாரணத்திற்கு ஒரு வீடு, ஒரு வணிக வளாகம், ஒரு அரண்மனை, ஒரு கோவில் போன்றவற்றுக்கு.

3.1.3 குறைபாடுள்ள மனையில் வசிப்பவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள்

முறையற்ற முறையில் கட்டப்பட்ட மனைகள் குடியிருப்பாளர்களுக்கு பல்வேறு வகையான துன்பங்களை ஏற்படுத்தும்:

  • வயிற்றில் கோளாறுகள், வாத நோய், பக்கவாதம் போன்ற உடல்ரீதியாக ஏற்படும் நோய்கள்.
  • கவலை, மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சனைகள்.
  • கருவில் உள்ள சிசுவிற்கு ஏற்படும் தீய விளைவுகள்.
  • மனையின் அறைகள் சீராக(வாஸ்து) கட்டபடாமல் இருந்தால் குறிப்பிட்ட வகையான துயரங்கள் அனுபவிக்க நேரலாம்.

3.2 மனையில் அதிர்வுகளை எற்படுத்தும் காரணிகள்

ஒருவரின் வீட்டை ஆவிகளின் பிடியிலிருந்து ஆன்மீக ரீதியாக எவ்வாறு சுத்தப்படுத்துவது பற்றிய எங்களது முந்தைய கட்டுரையில், மேற்கூறிய ஒவ்வொரு காரணிகளும் மனையின் ஒட்டுமொத்த அதிர்வுகளில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுகிறது என்பதை நாங்கள் விவரித்துள்ளோம்.

மனையில்(வீட்டில்) அதிர்வுகளை ஏற்படுத்தும் காரணிகள்

நிலம் மற்றும் கட்டிடங்களின் இயற்பியல் பண்புகளை விட ஒரு மனையின் குடியிருப்பாளர்கள் மற்றும் மனையின் பயன்பாடு மிக அதிக அளவில் அதன் அதிர்வுகளை தீர்மானிக்கிறது என்பதை இந்த முறிவு தெளிவுபடுத்துகிறது.

3.3 மனையின் அதிர்வெண்களுக்கான ஆன்மீகக் காரணங்கள்

பொதுவாக, மனைகள் தற்காலத்தில் ரஜ-தம சக்தியை பிரதானமாகக் கொண்டுள்ளது அதனால் அவற்றின் சக்தியின் வடிவமும் தெய்வ அம்சமாக அல்லாமல் ஆவிகளுக்கு ஒப்பாக உள்ளது.

இதை தவிர, சில வகையான மனைகள் தீய சக்திகளை ஈர்க்கின்றன (பேய்கள், பிசாசுகள், பேய்கள் போன்றவை).உதாரணமாக கஷ்டம் தரும் அதிர்வலைகளை அதிகமாக மருத்துவமனை, காவல் நிலையம், சிறைச்சாலை, தீய பரிவர்த்தனைகள் நடைபெறும் இடம், கொலை நடந்த இடம், கல்லறை அல்லது சுடுகாடு போன்றவைகளில் காணலாம் .ஏனெனில் அங்கு இருப்பவர்கள் மகிழ்ச்சியற்றவர்கள் அல்லது தீய மனப்பான்மை கொண்டவர்கள்.

ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை ஆன்மீக கோட்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலமும், ஸத்வ பிரதானமான வாழ்வியல் முறை மூலமும் நேர்மறை அதிர்வெண்களை மனைக்குள் ஈர்க்க முடியும். இதற்கான சில நடைமுறை குறிப்புகள் எங்களது அடுத்த கட்டுரையில் வழங்கப்படுகின்றன.

4. சுருக்கம் – வீட்டின் ஆன்மீக அதிர்வுகள்

வாஸ்துசாஸ்திரம் ஒரு மகிழ்ச்சியான வீடு அமைவதற்கு, நிலத்தின் தேர்வு மற்றும் கட்டிடக்கலையை பற்றிய மிகவும் பயனுள்ள ஆலோசனைகளை வழங்குகிறது. எவ்வாறாயினும், வீட்டில் வசிப்பவர்களின் இயல்பு மற்றும் மனையின் செயல்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை, அதனால் வீட்டில் வசிப்பவர்கள் அதன் தாக்கத்தை அனுபவிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.